வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோலங்கள்!

நெடுஞ்சாலை நடுவில்
நீளும்
வெள்ளைக் கோடுகள்.
நீ இட்டது போல்
நேர்த்தியாய் இருக்கிறது!

_________________________

முன் நெற்றியிலோ
புடவைத்தலைப்பிலோ
எப்பொழுதேனும்
காணக்கிடைக்கும்
கோலப்பொடித் தீற்றல்
உன்
கோலங்களை விட
அழகு பெறுகிறது!
__________________________

புள்ளிகளால்
கம்பிகளால்
வண்ணங்களால்
படைக்க இயலாத
மற்றொரு
அழகிய கோலம்
நீ மட்டுமே!
_________________

புள்ளிகள் இட்டு
கம்பிகள் இழுத்து
நடுவில் பூவும் வைத்து
நிமிர்கையில்
என்னைப் பார்த்தாய்!
இப்போது
அந்த பூவும், நானும்
சிறைக்குள்!

2 கருத்துகள்:

  1. //புள்ளிகள் இட்டு
    கம்பிகள் இழுத்து
    நடுவில் பூவும் வைத்து
    நிமிர்கையில்
    என்னைப் பார்த்தாய்!
    இப்போது
    அந்த பூவும், நானும்
    சிறைக்குள்! //

    இக்கவிதயினால் நானும் சிறைப் பட்டேன்

    பதிலளிநீக்கு
  2. நானும் சிறைப் பட்டேன்

    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு