செவ்வாய், 9 ஜூன், 2009

ஹைக்கூ...

அவஸ்தை...


அவளின்

கொலுசொலியில்

நிமிர்ந்து,

கண்னொளியில்

கவிழ்வது!
----------------------------------------------------------------------

ஏன்..


ஏன் கண் எறிந்தாய்?

என் மனக்குளத்தில்

பேரலைகள்..

திங்கள், 8 ஜூன், 2009

'பசங்க /ஸ்லம் டாக் மில்லியனர்'-ஒரு பார்வை!


ஆனந்த விகடனில் வந்த 52 மார்க், இன்னொரு இதழில் வெளிவந்த இயாக்குனரின் பேட்டி,T.V.ரேட்டிங் எல்லாம் பசங்க படம் பார்க்கும் ஆவலை தூண்டியது..


எளிமையும்,கதைகளத்தை தாண்டாத திரைக்கதையும் மிக முக்கியமாய் குறிப்பிடவேண்டியது.திரைக்கதையில் லாவகம் இருக்கிறது.தனி காமடி டிராக்,கிளாமர் டிராக் போன்ற தந்திரங்கள் இல்லை.அந்த வாத்தியார் கேரக்டர் மனதில் நிற்கிறது.எதிர் வீட்டு பையனை அடிப்பது,சண்டையின் போது 'வீட்டை விட்டு காலி பண்றேன் பார்' என்பது..கவனிக்க வேண்டிய காட்சிகள்!அந்த கேரக்டர் கம்பீரமாக படைக்கப்பட்டிருந்தாலும் ,ஹீரோ வொர்ஷிப் இல்லாதபடி இயல்பாய் இருக்கிறது.இயக்குனரிடம் எதிர்பார்க்கலாம்!


ஆரம்ப காட்சியில் ஒரு 'ஸ்டார்ட்' க்காகவும், மனதில் நிற்க வேண்டும் என்று இறுதிகாட்சியின் நீளத்திலும் கொஞ்சம் 'சினிமா' இருக்கிறது.மொத்தத்தில் இதுவும் உறுத்தாத குறைதான்.


'ஸ்லம் டாக் மில்லியனர்' படமும் பார்த்தேன்.இந்தியாவை அவமானப்படுத்தியது தவிர வேறென்ன இருக்கிறது அதில்?!உண்மையான நிலை சிறிது இருந்தாலும் கமர்சியலாகத்தான் கையாளப்பட்டுள்ளது.


டெக்னிகல் விசயங்கள், 'ஒன் லைனரை' பிரமதமாக்கும் திரைக்கதை,ஸப்டில் ப்ளே..எல்லாம் நமக்கு கைவந்து விட்டது!ஆஸ்கர் போன்ற விருதை அதன் சகல விளம்பரங்களுடன் உருவாக்கி மற்றவர்களுக்கு நாம் கொடுக்கலாம்!