செவ்வாய், 22 செப்டம்பர், 2009

எழுதக்கூடாத கவிதை..


மனதின் ஈரத்தில்
முளைத்து எழுந்தது
அந்தக் கவிதை.

மரபை மீறியதென்று
மாமக்கள் சினந்தனர்.
எச்சரித்தனர்.
வாள் கொண்டு கிழித்தனர்.

காயங்கள் ஆறிய
என் கையிலும் இருக்கிறது
கூரிய வாள்!

மனதின் ஓரத்தில்
அந்தக் கவிதையும்!

5 கருத்துகள்:

  1. மனதின் ஈரத்தில்
    முளைத்து எழுந்தது
    அந்தக் கவிதை.
    //////

    மனதில் முளைத்த
    கவிதையை மறைக்க
    வேண்டாம்

    மனதில் உள்ள
    ஈரத்தை
    கவிதையால் அகற்றுங்கள்

    மாமக்கள்ளா அல்லது
    மாமாக்களா எவர் ஆகட்டும்
    நம் கருத்தினை
    உமிழ்ஒம் கவிதையாக

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மனதின் ஈரத்தில் முளைக்கும் கவிதையின் கருவை மறைப்பது தகுமோ,

    கொட்டிவிடுங்கள் அள்ளிக்கொள்கிறோம்
    கவிதைகளை!!

    பதிலளிநீக்கு
  3. காயங்கள் ஆறிய
    என் கையிலும் இருக்கிறது
    கூரிய வாள்!
    நல்ல வரிகள்

    பதிலளிநீக்கு