வியாழன், 24 செப்டம்பர், 2009

செயற்கை இதயம்! இந்திய தயாரிப்பில் மிக குறைந்த விலையில் கிடைக்க இருக்கிறது...


மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.கரப்பான் பூச்சியின் இதயமோ 13 அறைகளைக் கோண்டது.இந்த அமைப்பினால் புவியில் அதிககாலம் தொடர்ந்து கொண்டிருக்கும் உயிரினமாக இருக்கிறது.இதை அடிப்படையாகக் கொண்டு ஐந்து அறைகள் கொண்ட செயற்கை மனித இதயத்தை, கரக்பூர் ஐ.ஐ.டி புரபஸர் சுஜாய் குஹா உருவாக்கியிருக்கிறார்

சோதனைகள் முடிந்து வெற்றி பெறும் தருவாயில் இருக்கும் முயற்சி கைகூடினால் மிகக் குறைந்த விலையிலும் இருக்கும்.அமெரிக்காவில் முப்பது லட்சங்களுக்கு கிடைகும் செயற்கை இதயமானது ஒரு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும்.

இன்றய நிலையில் ,உலக அள்வில் சுமார் இரண்டு கோடி பேர் செயற்கை இதயத்திற்கான தேவையுடன் உள்ளனர்.சுமார் முப்பது சதவீதத்தினரே தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சுஜாய் குஹாவினால் எண்ணற்றோர் பயனடைய வாய்ப்பு உள்ளது.

சமீப காலமாக இந்திய மருத்துவ சேவை சிறந்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த அறுவை சிகிச்சைககள் இங்கு நடை பெறுகின்றன.சென்னை முக்கிய இடத்தை வ்கிப்பது குறிப்பிடப்படவேண்டியது.

எளிய மக்களுக்கும் எல்லாம் கிடைத்தால் நன்றாயிருக்கும்.தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் நல்வரவாய் தெரிகிறது.வழக்கமான முறைகேடுகள் இன்றி மக்கள் பயனடைந்தால் பாராட்டலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக