கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 செப்டம்பர், 2009

பொருளிலார்க்கு...

பசுவும்,பாண்டமும்
மனிதனை அளந்தது
ஆரிய காலம்.

பொன்னும் பொருளும்
அதையே செய்யும்
நவீன காலம்.

இருப்போர்
இரங்குவதிலை.
இல்லாதோர்
நிமிர்வதில்லை.

மனிதம் வாழ்வதாயில்லை.
எக்காலத்திலும்.

எத்தனை கோடி சவங்கள்!

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

தொலைவில் நிற்பது

தொலைவில் நிற்பது!

தேர்தலில்
வாக்காளன்
தொலைவதை விடவும்

புகழ் ஒளியில்
ஆசிரியன்
தொலைவதை விடவும்

தேவைகள் முற்றானபின்
நண்பர்கள்
தொலைவதை விடவும்

வைபவஙகளில்
உறவுகளின ஆதிக்கத்தில்
அன்பானவன் தொலைவதென்பது
துக்ககரமானது.

ஆனால் எங்கும்
நிகழ்வது!

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

கோலங்கள்!

நெடுஞ்சாலை நடுவில்
நீளும்
வெள்ளைக் கோடுகள்.
நீ இட்டது போல்
நேர்த்தியாய் இருக்கிறது!

_________________________

முன் நெற்றியிலோ
புடவைத்தலைப்பிலோ
எப்பொழுதேனும்
காணக்கிடைக்கும்
கோலப்பொடித் தீற்றல்
உன்
கோலங்களை விட
அழகு பெறுகிறது!
__________________________

புள்ளிகளால்
கம்பிகளால்
வண்ணங்களால்
படைக்க இயலாத
மற்றொரு
அழகிய கோலம்
நீ மட்டுமே!
_________________

புள்ளிகள் இட்டு
கம்பிகள் இழுத்து
நடுவில் பூவும் வைத்து
நிமிர்கையில்
என்னைப் பார்த்தாய்!
இப்போது
அந்த பூவும், நானும்
சிறைக்குள்!