வியாழன், 15 அக்டோபர், 2009

காதல்.


சிலர் சைவம்.
சிலர் அசைவம்.

சிலருக்கு வான்.
சிலருக்கு மண்.

சிலருக்கு நெருஞ்சி.
சிலருக்கு காக்காமுள்.

நிறைய ஆய்ந்தும்
நிறைவுறாத ஆய்வு.

விபத்து.
இருப்பினும்
பெட்டிச்செய்தி அல்ல!

காலம் காலமாய்
நடக்கும் கண்கட்டு வித்தை.

உணர்ந்தவரெல்லாம் சொன்னபின்பும்
பொழிப்புரை தேவைப்படும் இலக்கியம்!

அது, அதுவானால்
அதுவே சொல்லும்
ஆன்மீகம்!

பின் குறிப்பு:இந்த பக்கத்தில் followers widget இணைக்க இயலவில்லை.jeyaperikai.blogspot.com என்ற பக்கத்தில் எனது பதிவுகளை தொடர்கிறேன்.தொடர்ந்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். 'சுழல்' கவிதைக்கு பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!

1 கருத்து:

  1. //நிறைய ஆய்ந்தும்
    நிறைவுறாத ஆய்வு.//

    இது வேல்ஜியின் ஆய்வு.
    க்யூட்டா அழகா இருக்கு.

    பதிலளிநீக்கு